பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:52
புதுடில்லி:நுகர்பொருட்கள் துறையில் பதஞ்சலி, மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழும்’ என்று, பியூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார். யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேதம் மற்றும் நுகர்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், பியூச்சர் குழுமத்துடன் இணைந்து, தன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இதுகுறித்து, பியூச்சர் குழும தலைமை செயல் அதிகாரி கிஷோர் பியானி கூறியதாவது:இந்தியாவில், தற்போது, நுகர்பொருட்கள் விற்பனையில், இந்துஸ்தான் யூனிலீவர் முதலிடத்திலும்; பி அண்டு ஜி, இரண்டாவது இடத்திலும் உள்ளன. பதஞ்சலி நிறுவனம், மாதந்தோறும், 20 சதவீதம் என்றளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. பதஞ்சலி புதிய பொருட்களை அதிகளவில் அறிமுகம் செய்து வருவதால், விரைவில் இத்துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.பதஞ்சலி நிறுவனம் விரைவில் வீட்டு பூஜை பொருட்கள் தயாரிப்பிலும் இறங்குகிறது. அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களில் அவை விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|