பதிவு செய்த நாள்
30 ஆக2016
04:39
புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர், டில்லியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையிலான, வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடைபெற்றது. இந்தியாவில், 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்டுள்ள, தேசிய முதலீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு நிதியம் குறித்து, அருண் ஜெட்லி எடுத்துரைத்தார். இந்த நிதியத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த காப்பீடு, ஓய்வூதியம் சார்ந்த நிதி அமைப்புகளுக்கு, சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதையும், அடிப்படை கட்டமைப்பு துறையின் வளர்ச்சி வாய்ப்பு குறித்தும் விளக்கினார். அடுத்த மாதத்திற்குள், ஜி.எஸ்.டி., சட்டம் இயற்றப்படும் எனவும் கூறினார். ‘இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, ஜி.எஸ்.டி., உதவும்’ என, பிரிட்ஸ்கர் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|