பதிவு செய்த நாள்
30 ஆக2016
04:41
புதுடில்லி : மொபிக்விக் நிறுவனம், டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை, அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஹரியானா மாநிலம், குர்கானைச் சேர்ந்த மொபிக்விக் நிறுவனம், மொபைல் போன் பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பிக் பஜார், டோமினோ பீட்சா, பி.வி.ஆர்., பீட்சா ஹட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், மேற்கண்ட நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர், மொபிக்விக் மொபைல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம்.
அதேபோல், ஐ.ஆர்.சி.டி.சி., ஊபர், மேரு, மேக் மை ட்ரிப் போன்ற நிறுவனங்களுக்கும், மொபிக்விக் மூலம் பணம் செலுத்தலாம். தற்போது, மொபிக்விக் மொபைல் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்தி, தினமும், 4,000 பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அந்த எண்ணிக்கையை, வரும் டிசம்பருக்குள், 25 ஆயிரமாக அதிகரிக்க, அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|