பதிவு செய்த நாள்
30 ஆக2016
04:41
புதுடில்லி : தொடர்ந்து ஏழு மாதங்களாக, இருசக்கர வாகனங்களில், ‘ஹோண்டா ஆக்டிவா’ அதிகளவில் விற்பனயாகி உள்ளது.
ஹோண்டா ஆக்டிவா விற்பனை, கடந்த ஜூலையில், 2 லட்சத்து, 56 ஆயிரத்து, 173 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த மாதத்தில் விற்பனையான மொத்த இருசக்கர வாகனங்களில், ஆக்டிவாவின் பங்கு, 38 சதவீதம் என்றளவில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் முன்னணி இடத்தை தொடர்ந்து வகித்து வந்த, ஸ்ப்ளெண்டரை விட, ஜனவரியில், 10,778; பிப்ரவரியில், 20,714 என, ஹோண்டா ஆக்டிவா கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து, ஹோண்டா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, கிராமங்களிலும் எங்கள் வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில், வாகனங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|