மாருதி சுசூகி இந்­தியா 1.19 லட்சம் கார் விற்­பனைமாருதி சுசூகி இந்­தியா 1.19 லட்சம் கார் விற்­பனை ... ரிலையன்ஸ் ஜியோ ‘4ஜி’ சேவை அறிமுகமாகிறது ரிலையன்ஸ் ஜியோ ‘4ஜி’ சேவை அறிமுகமாகிறது ...
வாகன துறைக்கு தனி அமைச்­ச­ரவை; மத்­திய அர­சுக்கு ‘சியாம்’ கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2016
23:33

புது­டில்லி : ‘வாகன துறை தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு, உட­னுக்­குடன் தீர்வு கண்டு, அத்­துறை, தடை­யில்லா வளர்ச்சி காண்­ப­தற்­காக, தனி அமைச்­ச­கத்தை உரு­வாக்க வேண்டும்’ என, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’, மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.
இக்­கூட்­ட­மைப்பின், 56வது ஆண்டு பொதுக்­கூட்டம், டில்­லியில் நடை­பெற்­றது. அதில், சியாம் தலை­வரும், அசோக் லே லாண்ட் நிறு­வ­னத்தின் நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான வினோத் தேசரி பேசி­ய­தா­வது: டில்­லியில், சுற்­றுச்­சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., மற்றும் அதற்கு மேற்­பட்ட இன்ஜின் திறன் கொண்ட டீசல் கார்­க­ளுக்கு, 2015 டிசம்­பரில், சுப்ரீம் கோர்ட் தடை விதித்­தது. இந்த தடை உத்­த­ரவு, ‘2,000 சி.சி., இன்ஜின் திற­னுள்ள, டீசல் கார்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்கள், ஒரு சத­வீதம் பசுமை வரி செலுத்த வேண்டும்’ என்ற நிபந்­த­னை­யுடன், கடந்த மாதம் தளர்த்­தப்­பட்­டது.
இருந்த போதிலும், இந்த தடையால், கடந்த எட்டு மாதங்­களில், வாகன துறைக்கு, 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இது போல், பல பிரச்­னை­களை வாகன துறை சந்­தித்து வரு­கி­றது. இதே நிலை, எதிர்­கா­லத்­திலும் தொடரும் என்ற அச்­சமும் உள்­ளது. வாகன துறையின் வளர்ச்­சிக்கு தடை­யா­கவும், அன்­னிய நேரடி முத­லீ­டு­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யா­கவும் உள்ள பிரச்­னை­க­ளுக்கு, உட­ன­டி­யாக தீர்வு காண, இந்­திய வாகன துறைக்கு என, தனி அமைச்­சகம் ஏற்­ப­டுத்த வேண்டும்.
இது­கு­றித்து, மத்­திய அர­சிடம் நேர­டி­யாக கோரிக்கை மனு அளிக்­கப்­படும். தனி அமைச்­சகம், வாகன துறைக்கு தொழில்­நுட்பம் சார்ந்த ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டு­களை உரு­வாக்கும். அவற்றை, வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் பின்­பற்­றும்­பட்­சத்தில், பிரச்­னைகள் குறையும். வாகன துறை சந்­திக்கும் பிரச்­னை­களை புரிந்து கொண்டு, உரிய முறையில் அவற்­றுக்கு தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை, தனி அமைச்­சகம் விரைந்து எடுக்கும். இது, வாகன துறையின் தடை­யற்ற, சீரிய வளர்ச்­சிக்கும் உதவும். இவ்­வாறு அவர் கூறினார்.
டில்­லியில், டீசல் கார்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடையால், மெர்­சிடெஸ் பென்ஸ், டொயோட்டா உள்­ளிட்ட, பன்­னாட்டு நிறு­வ­னங்கள் கடும் இழப்பை சந்­தித்­துள்­ளன. இந்­நி­று­வ­னங்கள், இந்­தி­யாவில் மேற்­கொண்டு முத­லீடு செய்யும் திட்­டங்­களை நிறுத்தி வைத்­துள்­ளன. சுற்­றுச்­சூழல் பிரச்­னையை சமா­ளிக்க, மகிந்­திரா அண்டு மகிந்­திரா நிறு­வனம், அதன் டீசல் கார்­களில், 1,990 சி.சி., திற­னுள்ள இன்­ஜின்­களை பொருத்த முடிவு செய்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)