பதிவு செய்த நாள்
03 செப்2016
03:10
புதுடில்லி : மைக்ரோசாப்ட் நிறுவனம், டில்லியில், ‘சைபர் செக்யூரிட்டி’ மையம் அமைக்க முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், இணையதளம் தொடர்பான குற்றப் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட், டில்லியில், சைபர் செக்யூரிட்டி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு, உலகில் ஏழு இடங்களில் சைபர் செக்யூரிட்டி மையங்கள் உள்ளன. நாங்கள், இன்டர்போல், யூரோபோல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து, சைபர் குற்றங்களுக்கு எதிராக போராடி வருகிறோம். டில்லியில் அமைக்கப்பட உள்ள மையத்தில் இருந்தபடியே, நாடு முழுவதும் நடக்கும் இணையதள குற்றங்கள் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|