பதிவு செய்த நாள்
03 செப்2016
03:16
மும்பை : ‘‘ஆயுள் காப்பீட்டு துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி.,யின் பங்குகளை, பங்குச்சந்தையில் பட்டியலிட்டால், சந்தை மூலதனத்தில், நாட்டின் மிகப்பெரிய மதிப்புமிக்க நிறுவனம் என்ற சிறப்பை பெறும்’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
அவர், மும்பையில், எல்.ஐ.சி.,யின், 60வது ஆண்டு விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம், வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், வரும் ஆண்டுகளில், முழுமையான காப்பீட்டு வசதியுடன், சமூக பாதுகாப்பு கொண்ட நாடாக, இந்தியா மாறும். இந்த சாதனையில், எல்.ஐ.சி.,யின் பங்கு, மிகப்பெரிய அளவில் இருக்கும். காப்பீட்டு துறையில், தனியாருக்கு அனுமதி வழங்கி, 16 ஆண்டுகள் கடந்த பின்னரும், எல்.ஐ.சி., இத்துறையில், 76.99 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது பாராட்டத்தக்கது.
போட்டிமிக்க இன்றைய சூழலில், பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., போன்ற, ஒருசில நிறுவனங்கள் மட்டுமே, அவற்றின் துறையில், தனியாதிக்கத்துடன் முதலிடத்தில் உள்ளன. ஏழைகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, ஆரோக்கிய பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பொது பட்ஜெட்டில், ஓய்வூதிய சமுதாயத்தை உருவாக்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கு, தொழில் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பின் அவசியம் குறித்து, நம்மிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|