பதிவு செய்த நாள்
04 செப்2016
04:09
சென்னை:‘‘நாட்டின் ஏற்றுமதி மெதுவாக, அதேசமயம் நிலையாக வளர்ச்சி கண்டு வருகிறது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.சென்னையில், பிராந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், ஏற்றுமதி, 15 சதவீதம் குறைந்து, 26,230 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இந்த சரிவு, கடந்த ஜூன் மாதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி தள்ளுபடி, வர்த்தகம் சார்ந்த ஊக்கச் சலுகைகள் போன்றவற்றால், இது சாத்தியமாகிஉள்ளது. அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா உட்பட, நீண்ட கால வர்த்தக பாரம்பரியம் உள்ள, 15 நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது.அதேநேரத்தில், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய நாடுகளில், வர்த்தக வாய்ப்புகள் கண்டறியப்பட்டு, ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதை மேலும் உயர்த்தும் நோக்கில், அந்நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெலாரஸ், அர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய, யூரேஷியா பொருளாதார கூட்டமைப்புடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.
அதுபோல, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரிட்டனுடன், தனியே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், ஏற்றுமதி விரைவாக வளர்ச்சி காணும் என, கூற முடியாது. ஏனெனில், சர்வதேச நாடுகளில், இன்னும் தேவை அதிகரிக்காமல் உள்ளது. அதனால், நாட்டின் ஏற்றுமதி மெதுவாக, அதேசமயம் நிலையாக வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|