பதிவு செய்த நாள்
04 செப்2016
04:10
புதுடில்லி:சஹாரா குழுமம், முதலீட்டாளர்களுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி அளித்ததாக கூறுவதற்கு, உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், சஹாரா குழுமத்தின் துணை நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியதாக தெரிவித்தது. ஆனால், இதில் தவறு நடந்துள்ளதாக செபி தெரிவித்ததை அடுத்து, விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அண்மையில், பணத்தை திருப்பி அளிப்பதாக உறுதி அளித்ததன் பேரில், சுப்ரதா ராய் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு இதுவரை, 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை திருப்பி வழங்கி விட்டதாக, சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.இதையடுத்து உச்ச நீதிமன்றம், பணத்தை திருப்பி கொடுத்ததற்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|