பதிவு செய்த நாள்
04 செப்2016
04:12
புதுடில்லி:டாடா குழுமத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான, நந்தன் நிலேகனி, மத்திய நிதி துறை முன்னாள் செயலர் விஜய் கேல்கர் ஆகியோர் இணைந்து, ‘அவன்தி பைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரத்தன் டாடா, ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:ஏழைகளுக்கு எளிய கடன் உதவி வழங்குவதற்கான பணியில், அவன்தி பைனான்ஸ் ஈடுபடும். அதுபோல, இதுவரை கடன் உதவி கிடைக்காத துறைகளை கண்டறிந்து, அப்பிரிவில் உள்ளோருக்கும் எளிய கடன்கள் வழங்கப்படும். பாதுகாப்பான, இக்கடன் வசதி, மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றும். சிறிய அளவில் வியாபாரம் புரிவோர் ஏற்றம் காண துணை புரியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். டாடா, நந்தன் நிலேகனி ஆகியோரின் அறக்கட்டளைகள், அவன்தி பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. இதிலிருந்து கிடைக்கும் லாபம், மீண்டும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|