டாடாவின் அவன்தி பைனான்ஸ் ஏழை­க­ளுக்கு கட­னு­தவிடாடாவின் அவன்தி பைனான்ஸ் ஏழை­க­ளுக்கு கட­னு­தவி ... கவ­னத்தை ஈர்க்கும்   தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள்  கவ­னத்தை ஈர்க்கும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் ...
ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம்:‘4ஜி’ மொபைல் போன் சேவையில் இழப்பை தவிர்க்க 3 ஆண்­டு­க­ளாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2016
04:13

புது­டில்லி:‘மொபைல் போன் சேவையில் கள­மி­றங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம், இழப்பில் இருந்து மீள, 2 – 3 ஆண்­டு­க­ளாகும்’ என, சந்தை ஆய்­வா­ளர்கள் தெரி­வித்து உள்­ளனர். ரிலையன்ஸ் குழு­மத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் ஜியோ நிறு­வ­னத்தின், ‘ஆர்­ஜியோ’ 4ஜி மொபைல் போன் சேவை, நாளை முதல், அதி­கா­ர­பூர்­வ­மாக துவங்­கு­கி­றது. சந்­தா­தா­ரர்­க­ளுக்கு, டிச., 31 வரை, அனைத்து சேவை­களும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட உள்­ளன. அதன்பின், 149 – 4,999 ரூபாய் வரை, 10 வித­மான திட்­டங்­க­ளுக்கு, கட்­டணம் நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.
அந்த திட்­டங்­க­ளிலும், ‘காலம் முழு­வதும் குரல் வழிச் சேவை, ‘ரோமிங்’ எனப்­படும், வெளி­யூரில் இருந்து பேசுதல் ஆகி­யவை முற்­றிலும் இல­வசம்‘ என, அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.இதன்­படி, ஒருவர் மொபைல் போனில், எவ்­வ­ளவு நேரம் வேண்­டு­மா­னாலும் இல­வ­ச­மாக பேசலாம். அதே­ச­மயம், சந்­தா­தா­ரரின் கணக்கில், பேசும் நேரத்­திற்கு ஏற்ப, 4ஜி தொழில்­நுட்­பத்தில் வழங்­கப்­படும் இணையம் சார்ந்த, ‘டேட்டா’ பயன்­பாட்டின் அளவு, குறைந்து கொண்டே வரும். இந்த டேட்டா பயன்­பாட்டு கட்­டணம் கூட, இதர நிறு­வ­னங்­களை விட, 80 சத­வீதம் குறைந்த கட்­ட­ணத்தில், 1 ஜி.பி.,க்கு மாதம், 50 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. ஏர்டெல், வோடபோன் போன்ற நிறு­வ­னங்கள், மொபைல் போனில் பேசு­வ­தற்கும், ஸ்மார்ட் போனில் இணையம் சார்ந்த, ‘டேட்டா’ பயன்­பாட்­டிற்கும், தனித்­த­னி­யாக, சந்­தா­தா­ரர்­க­ளிடம் கட்­டணம் வசூ­லிக்­கின்­றன.
ஆர்­ஜியோ, ‘4ஜி’ சேவையை மட்­டுமே வழங்­கு­வதால், பேசு­வது, தகவல், படங்­களை பரி­மாறிக் கொள்­வது, பல்­வேறு நிகழ்ச்­சி­களை பார்ப்­பது உள்­ளிட்ட வச­தி­களை, ஒரே குடையின் கீழ் வழங்­கு­கி­றது. இது போன்ற சலு­கை­களால், ஆர்­ஜியோ கடும் இழப்பை சந்­திக்கும் என, ஆய்­வா­ளர்கள் தெரி­வித்து உள்­ளனர்.ஐ.டி.எப்.சி., செக்­யூ­ரிட்டீஸ்: ஆர்­ஜியோ இழப்பில் இருந்து மீள, மொபைல் போன் சேவைக்கு, மாதம் சரா­ச­ரி­யாக, 180 ரூபாய் செல­விடும், 7.50 – 8 கோடி சந்­தா­தா­ரர்­களை சேர்க்க வேண்டும். இதன் மூலம், 2 – 3 ஆண்­டு­களில், இழப்பை சரி­கட்­டலாம்.
மோதிலால் ஆஸ்வால் நிறு­வனம்: மொபைல் போன் சேவைக்கு, மாதம் சரா­ச­ரி­யாக, 244 ரூபாய் செல­வ­ழிக்கும், 7.50 கோடி சந்­தா­தா­ரர்­களை திரட்­டினால், ஆர்­ஜியோ ஆண்­டுக்கு, 18,400 கோடி ரூபாய் ஈட்டும்.
அப்­போது கூட, 1,580 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்­படும். ஏர்டெல் போன்ற இதர சந்­தா­தா­ரர்­களை அழைப்­ப­தற்­கான இணைப்பு வச­திக்கு, ஆர்­ஜியோ ஆண்­டுக்கு, 5,300 கோடி ரூபாய் செல­விட நேரும். அதனால், மூன்று ஆண்­டு­க­ளுக்கு லாபத்தை நினைத்து பார்க்­கவே முடி­யாதுஎடல்வைஸ் செக்­யூ­ரிட்டீஸ்: ஆர்­ஜி­யோவால், போட்டி நிறு­வ­னங்கள் கண்­டிப்­பாக சந்­தா­தாரர்­களை இழக்கும். அதே­ச­மயம், ஆர்­ஜியோ, 500 ரூபாய் வரை, இரு திட்­டங்­களை மட்­டுமே அறி­வித்­துள்­ளதால், போட்டி நிறு­வ­னங்கள், அத்­தொ­கைக்கு ஏற்ப, பல திட்­டங்­களை அறி­வித்து, சந்­தா­தா­ரர்­களை தக்­க­வைத்துக் கொள்ள முயற்­சிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)