பதிவு செய்த நாள்
07 செப்2016
07:30
சென்னை : எக்விடாஸ் நிறுவனம், சென்னையில் சிறு நிதி வங்கி சேவையில் இறங்கியிருக்கிறது. இதுகுறித்து, ‘எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’கின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான வாசுதேவன் கூறியதாவது:எங்கள் நிறுவனம், நுண் கடன், பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்களுக்கு கடன் வழங்குவது ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தகட்டமாக வங்கி சேவையில் ஈடுபடுவதற்கு, கடந்த ஆண்டு அக்., மாதம், ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சென்னையில் மூன்று கிளைகளுடன், வங்கி சேவையை துவக்கி உள்ளோம் எங்கள் நிறுவனத்திற்கு, தற்போது, 580 கிளைகள் உள்ளன. இதில், 412 கிளைகளை, வங்கி கிளைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு, 26 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களது டிபாசிட் மூலாக, 500 கோடி ரூபாய் திரட்ட வாய்ப்புள்ளது என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|