பதிவு செய்த நாள்
07 செப்2016
07:31
புதுடில்லி : மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: தேசிய சுற்றுலா மாநாடு, வரும், 21ம் தேதி டில்லியில் துவங்குகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், ஓட்டல், ஆடம்பர சுற்றுலா உள்ளிட்ட துறைகளில், 70 நிறுவனங்களைச் சேர்ந்த, 144 முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பல மாநிலங்கள் பங்கேற்று, சுற்றுலா துறையில் உள்ள, 600க்கும் மேற்பட்ட முதலீட்டு திட்டங்களை வெளியிட உள்ளன. இதன் மூலம், நாட்டின் சுற்றுலா துறையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களில், சுற்றுலா துறையை மேம்படுத்த, ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத்தின் கீழ், மத்திய அரசு, 2,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. காஷ்மீருக்கு மட்டும், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ள, தேசிய சுற்றுலா கொள்கைக்கு, விரைவில் அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெறப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|