பதிவு செய்த நாள்
07 செப்2016
07:33
புதுடில்லி : மத்திய அரசு, இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில், 100சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, சமீபத்தில் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலையிலான குழு, பிரிட்டனுக்கு சென்றுள்ளது. இக்குழு, இந்தியாவில் உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதல் துறைகளில் முதலீடு செய்ய வருமாறு, பிரிட்டனில், மூன்று நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளும். இதற்காக, பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோர், இக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அதில், இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், வர்த்தக விதிமுறைகள் தளர்வு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் குறித்து, விரிவாக எடுத்துரைக்கப்படும் என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|