பதிவு செய்த நாள்
07 செப்2016
07:33
கொச்சி : ‘பேக்ட்’ நிறுவனம், உரங்கள் உற்பத்தியில், சாதனை படைத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த பேக்ட் நிறுவனம், ‘பேக்டோமாஸ்’ உள்ளிட்ட உரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், உத்யோக்மண்டல் வளாகத்தில், கடந்த ஆக., மாதம், 21 ஆயிரத்து, 284 டன் பேக்டோமாஸ் உரம் உற்பத்தி செய்து, சாதனை படைத்துள்ளது. அதேபோல், துத்தநாகம் கலந்த பேக்டோமாஸ் உற்பத்தியும், முன் எப்போதும் இல்லாத வகையில், 7,042 டன்னாக உயர்ந்துள்ளது. பேக்ட் நிறுவனம், கொச்சி வளாகத்தில், 56 ஆயிரத்து, 656 டன் பேக்டோமாஸ் உரம் உற்பத்தி செய்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆக., மாதத்தில், அந்த நிறுவனத்தின் மொத்த பேக்டோமாஸ் உரம் உற்பத்தி, 77 ஆயிரத்து, 940 டன்னாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த ஏழு ஆண்டுகளில், அந்த நிறுவனத்தின் அதிக உற்பத்தி அளவாகும். கடந்த ஆக., மாதம், அந்த நிறுவனத்தின் அனைத்து வகை உரங்கள் விற்பனை, 88 ஆயிரத்து, 570 டன்னாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|