பதிவு செய்த நாள்
10 செப்2016
07:31
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் கூறியதாவது: வாடிக்கையாளர் சார்ந்த வங்கிப் பணிகள், வேளாண் வர்த்தகம், அன்னியச் செலாவணி, கருவூலம் உட்பட, 200க்கும் மேற்பட்ட வங்கி நடைமுறைகளில், ‘சாப்ட்வேர் ரோபோ’ பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஒரு நாளைக்கு, 10 லட்சத்திற்கும் அதிகமான வங்கிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வங்கிச் சேவை தொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு பதிலளிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், 60 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், பணியின் துல்லியம், 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, வங்கிச் செயல்பாடுகளையும், ஆற்றலையும் அதிகரிக்க உதவியுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த பணிகளை, வங்கி ஊழியர்கள், மேலும் அதிக கவனத்துடன் கையாள, சாப்ட்வேர் ரோபோ பயன்பாடு உதவுகிறது. இவ்வசதி உள்ள, ஒருசில சர்வதேச வங்கிகளில், ஐ.சி.ஐ.சி.ஐ., இணைந்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|