பதிவு செய்த நாள்
10 செப்2016
07:32
புதுடில்லி : ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் நிறுவனங்கள், போதிய இணைப்புகளை வழங்க மறுப்பதால், தன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக, சமீபத்தில் மொபைல் போன் சேவையை துவக்கிய, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புகார் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான – ‘டிராய்’ டில்லியில், ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில், ‘கோய்’ எனப்படும் மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கலந்து கொண்டார்.
அப்போது, ‘மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்குதான், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; கூட்டமைப்பிற்கு அல்ல’ என கூறி, ராஜன் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் மேத்யூஸ், ‘‘ரிலையன்ஸ் ஜியோவின் உத்தரவுக்கு பணிந்து, என்னை, கூட்டத்தில் இருந்து, டிராய் வெளியேற்றி விட்டது,’’ என கூறினார். இதை, அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான, ரிலையன்ஸ் ஜியோ இயக்குனர் மகேந்திர நகாதா மறுத்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|