பதிவு செய்த நாள்
10 செப்2016
07:33
புதுடில்லி : பெங்களூரைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, பைஜு, 2011 முதல், ‘கேட், ஜிமேட், ஜீ ’ உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சியை, ‘ஆன்லைன்’ வாயிலாக வழங்கி வருகிறது. இத்துடன், நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, மாணவர்கள் பயில்வதற்கான பாடத்திட்டங்களை கொண்ட மொபைல் போன் செயலியை, கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தியது. இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், ‘பைஜு’ புகழ் பரவியதை அடுத்து, அந்நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த, சான் – ஜூக்கர்பர்க் அறக்கட்டளை, 335 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க், தன் மனைவி பிரிசில்லா சான் உடன் இணைந்து, பெருந்தொகையை ஒதுக்கி, சான் – ஜூக்கர்பர்க் இனிஷியேட்டிவ் என்ற அறக்கட்டளையை துவக்கியுள்ளார். இந்த அமைப்பு, கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ள, இந்தியாவின் பைஜு நிறுவனத்தில் முதன்முதலாக, முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|