பதிவு செய்த நாள்
12 செப்2016
00:30
தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., கீழ் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் மூன்று வகையான நிதிகளில் முதலீடு செய்யலாம். மூன்றாவது நிதியான தானியங்கு வாய்ப்பின் கீழ் தற்போது, ‘அக்ரசிவ் லைப் சைக்கிள் பண்ட் மற்றும் கன்சர்வேட்டிவ் லைப்சைக்கிள் பண்ட்’ ஆகிய இரண்டு நிதிகள் பென்ஷன் நிதி ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அக்ரசிவ் லைப்சைக்கிள் பண்ட் மூலம், 35 வயது வரை, 75 சதவீத தொகையை சம பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இரண்டாவது நிதியில், 35 வயது வரை, 25 சதவீத தொகையை சம பங்குகளில் முதலீடு செய்யலாம். ஏற்கனவே உள்ள நிதி மாடரேட் லைப்சைக்கிள் பண்ட் என அழைக்கப்படும். இதில், 35 வயது வரை, 50 சதவீத தொகையை சம பங்குகளில் முதலீடு செய்யலாம்.இதன் மூலம் இளம் வயதினர் அதிக அளவில் சம பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. என்.பி.எஸ்., தொடர்பான விழிப்புணர்வு கொண்ட, இளம் முதலீட்டாளர்கள் இந்த திட்டங்களால் ஈர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|