பதிவு செய்த நாள்
12 செப்2016
02:55
சென்னை : நிஸான் நிறுவனம், தன் தயாரிப்பான, டட்சன் கோ பிளஸ் கார்களை, தென்னாப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி விட்டது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற, டட்சன் கோ பிளஸ் கார்களை தென்னாப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கிவிட்டது. டட்சன் கோ பிளஸ் கார்கள், சென்னையில் ரெனோ _ நிஸான் கூட்டு மூலம் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நாளில் முதற்கட்டமாக, 428 கார்களை இங்கிருந்து தென்னாப்ரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்துள்ளது நிஸான். டட்சன் கோ கார்கள் தென்னாப்ரிக்காவில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது டட்சன் கோ பிளஸ் கார்களை தென்னாப்ரிக்காவில் சந்தைப்படுத்த முன்வந்திருக்கிறது. இதுவரை சென்னை ஆலையிலிருந்து, 6 லட்சத்து, 20 ஆயிரம் கார்கள், 106 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|