பதிவு செய்த நாள்
12 செப்2016
02:56
மும்பை : மும்பை பங்கு சந்தை, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, ‘செபி’யிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.
பி.எஸ்.இ., எனப்படும் மும்பை பங்கு சந்தை ஆசிய நாட்டிலிருக்கும் சந்தைகளில் மிகவும் பழைமையானது. இது, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 52.72 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்த நிலையில், மும்பை பங்கு சந்தை, பங்கு வெளியீட்டுக்கு வர முடிவு செய்து உள்ளது. இதற்காக, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம், அனுமதி கோரியுள்ளது. ஏற்கனவே, ‘செபி’ அமைப்பிடம், கொள்கை அளவிலான ஒப்புதலை, பி.எஸ்.இ., பெற்றுள்ளது. தற்போது, முழு அனுமதி கேட்டு, விண்ணப்பம் அளித்துள்ளது. இது, கிடைத்ததும் பங்குகளை வெளியிட்டு, 1,200 – 1,300 கோடி ரூபாய் நிதி திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை பங்கு சந்தையை தொடர்ந்து, தேசிய பங்கு சந்தையும் பங்குகளை வெளியிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|