பதிவு செய்த நாள்
12 செப்2016
02:57
புதுடில்லி : ஜெர்மன் நாட்டை சேர்ந்த நிறுவனமான, லிபெர் குழுமம் இயந்திரங்கள் தயாரிப்பு, கட்டுமானம் மற்றும் உயர் ரக ரெப்ரிஜிரேட்டர்கள் தயாரிப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் இந்தியாவில் அவுரங்காபாத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் ரெப்ரிஜிரேட்டர் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருக்கிறது.
இந்த ஆலைக்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்து, வரும் 2018ம் ஆண்டில் செயல்படத் துவங்கும் என, இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. லிபெர் நிறுவனத்தின் இந்த உயர் ரக ரெப்ரிஜிரேட்டரின் விலை, 1.80 லட்சம் ரூபாயிலிருந்து, 5.50 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. அவுரங்காபாத் ஆலையில், இந்தியாவில் கிடைக்காத சில பாகங்களை தவிர, பிறவற்றை உள்நாட்டு பொருட்களை வைத்தே தயாரிக்க இருக்கிறது.லிபெர் தன் தயாரிப்பு பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக அனுபவ மையங்களை நாடெங்கும் விரைவில் திறக்க இருக்கிறது. மும்பையை அடுத்து டில்லி, பெங்களூரில் விரைவில் இந்த மையங்களை துவக்க இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|