பதிவு செய்த நாள்
12 செப்2016
03:00
புதுடில்லி : இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, கார்களின் பின்புறத்தில் நடப்பவற்றை ஓட்டுபவர் அறியும் வகையிலான, சென்சார்களை பொருத்துவதை கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு, 50 ஆயிரம் கோர விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காரின் பின்பகுதியில் சென்சார்களை பொருத்துவதை கட்டாயமாக்கும் பட்சத்தில், பாதசாரிகள் சிறு குழந்தைகள் ஆகியோர் கார் பின்புறமாக வரும்போது ஆபத்துக்கு உள்ளாகாமல் தடுக்கப்படும் என அரசு கருதுகிறது.
2018 அக்டோபரிலிருந்து கார்களில் காற்றுப் பைகள், ஏபிஎஸ் சிஸ்டம், வேக கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை பொருத்துவது கட்டாயமாகிறது என அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ரிவர்ஸ் சென்சார்களை பொருத்துவதையும் கட்டாயமாக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தால் விபத்துக்கள் மிகவும் குறையும் என அரசு கருதுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|