பதிவு செய்த நாள்
12 செப்2016
03:00
சென்னை : ஐ.டி.சி., நிறுவனம், தன் உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்க்கிறது.
ஐ.டி.சி., நிறுவனம், உணவுப்பொருட்கள் பிரிவில் பல புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.இந்நிறுவனம் கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில் ஒரு பில்லியன் டாலர் அதாவது, அன்றைய நிலையில், 6,411 கோடி ரூபாய் வருவாய் என்ற நிலையை இப்பிரிவில் தொட்டது. அடுத்து, 7,200 கோடி ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தது. தற்போது அடுத்தகட்டமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை எதிர்பார்க்கிறது.தற்போது இந்நிறுவனம் பாலுக்கு பதிலாக பயன்படும் ஒயிட்னர், விலையுயர்ந்த சாக்லெட் ஆகியவற்றின் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. ஏப்ரல் மாதத்தில், பேப்லெ எனும் புதிய சாக்லெட்டை அறிமுகம் செய்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது, ஐ.டி.சி., நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|