சூரிய மின்­சக்தி துறையில் அதானி, டாடா முன்­னிலைசூரிய மின்­சக்தி துறையில் அதானி, டாடா முன்­னிலை ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.93 இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.93 ...
இந்­திய மின்­னணு வணிக சந்தை ரூ.1.90 லட்சம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
03:02

புது­டில்லி : ‘இந்­திய மின்­னணு வணிகத் துறையின் சந்தை மதிப்பு, வரும், 2019–20ம் நிதி­யாண்டில், 1.90 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்’ என, கோட்டக் ஈக்­யுட்டிஸ் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்: இந்­திய மக்கள், வலை­தளம் வாயி­லாக பொருட்கள் வாங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன், தனிநபர் செல­வ­ழிப்பும் நிலை­யாக உயர்ந்து வரு­கி­றது.இதனால், மின்­னணு வணிகத் துறையின் வளர்ச்சி, சிறப்­பாக உள்­ளது. வரும் ஆண்­டு­களில், மேலும் பல நிறு­வ­னங்கள் இத் துறையில் கள­மி­றங்க உள்­ளன. அதனால், மின்­னணு வணிக சந்­தையின் மதிப்பு, 2019 – 20ம் நிதி­யாண்டில், 1.90 லட்சம் கோடி ரூபா­யாக உயரும். இதே காலத்தில், தற்­போது, 12 சத­வீ­த­மாக உள்ள வலை­த­ளத்தில் பொருட்கள் வாங்­கு­வோரின் பங்கு, 18 சத­வீ­த­மாக உயரும்.
வலை­த­ளத்தில் பொருட்­களை வாங்க செல­வி­டு­வது, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 10 – 15 சத­வீதம் அதி­க­ரிக்கும். அதி­க­ரித்து வரும் குடும்ப வருவாய், பெருகி வரும் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் போன்­ற­வற்றால், 2017 – 20 வரை, மின்­னணு வணிக துறையின், ஆண்டு சரா­சரி வளர்ச்சி விகிதம், 45 சத­வீ­த­மாக உயரும்.மின்­னணு வணிக நிறு­வ­னங்கள், அவற்றின் விற்­பனை கொள்­கையில், காலத்­திற்கு ஏற்ப மாறு­தல்­களை செய்தால் வளர்ச்­சியை தக்க வைத்துக் கொள்­ளலாம். குறிப்­பாக, லாப வரம்பு குறை­வாக உள்ள மொபைல்போன் உள்­ளிட்ட மின்­னணு சாத­னங்­களின் விற்­ப­னைக்கு அளிக்­கப்­படும் முக்­கி­யத்­து­வத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சாத­னங்கள், போட்டி வலை­த­ளங்­களில், வெவ்­வேறு விலை­களில் கிடைப்­பதால், வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் நம்­ப­கத்­தன்­மையை தக்க வைத்துக் கொள்­வது கடி­ன­மாக உள்­ளது. அதனால், புதிய, வித்­தி­யா­ச­மான, தனித்­தன்­மை­யுள்ள பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­து­வதில், நிறு­வ­னங்கள் கவனம் செலுத்த வேண்டும். பொருட்­களை விரைந்து, ‘டெலி­வரி’ செய்தல், விற்­பனை செய்து பணம் பெற்றுக் கொள்­ளுதல் போன்­ற­வற்றின் மூலம் வாடிக்­கை­யா­ளர்­களின் நம்­பிக்­கையை பெற முடியும்.
மின்­னணு வணி­கத்தில், நீண்ட கால­மாக வலை­த­ளத்தில் பொருட்­களை வாங்கி வரு­வோ­ரையும், உயர் மதிப்­புள்ள பொருட்கள் மற்றும் சேவை­களை விரும்­பு­வோ­ரையும் கவர, நிறு­வ­னங்கள் முயற்­சிக்க வேண்டும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நக­ரங்­களில், புதி­தாக வலை­த­ளத்தில் பொருட்கள் வாங்­குவோர் அதிகம் இருப்பர். அவர்­களின் நம்­பிக்­கையை பெற, சிறிது கால­மாகும்.
இந்­தி­யர்கள், 2025ல், போக்­கு­வ­ரத்து, தொலைத்­தொ­டர்பு, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு போன்ற அத்­தி­யா­வ­சி­ய­மான அல்­லது ஓர­ளவு அவ­சி­ய­மான துறை­க­ளுக்கு அதி­க­மா­கவும்; ஆடைகள், வீட்டு வசதி பொருட்கள், தனிநபர் சாத­னங்கள் ஆகி­ய­வற்­றுக்கு குறை­வா­கவும் செல­வி­டுவர் என, கணிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால், அப்­போது, வலை­தளம் வாயி­லான சில்­லரை விற்­ப­னையும், அவற்­றுக்­காக மக்கள் செல­வி­டு­வதும் குறையும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)