பதிவு செய்த நாள்
13 செப்2016
07:38
பெங்களூரு : பிளிப்கார்ட் நிறுவனம், 10 ஆயிரம் பேருக்கு, தற்காலிக வேலை வழங்க உள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம், விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தற்காலிக அடிப்படையில், 10 ஆயிரம் பேருக்கு, வேலை வழங்க உள்ளது.
இதுகுறித்து, பிளிப்கார்ட் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் சேத் கூறியதாவது: பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் வழங்க உள்ளோம். குறிப்பாக, ‘பிக் பில்லியன் டேஸ்’ என்ற காலத்தில் வழங்கப்படும் சலுகையால், அதிகளவில் பொருட்கள் விற்பனையாகும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் பொருட்களை, ‘டெலிவரி’ செய்ய, தற்காலிக அடிப்படையில், 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பிளிப்கார்ட்டை தொடர்ந்து, ஸ்நாப்டீல் நிறுவனமும், பலரை பணியில் அமர்த்தும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|