பதிவு செய்த நாள்
13 செப்2016
07:40
புதுடில்லி : பதஞ்சலி நிறுவனம், பாக்., உள்ளிட்ட, வெளிநாடுகளிலும் தன் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் நவீன ஆடைகள் தயாரிப்பிலும் இறங்குகிறது.
யோகா குருவான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனத்திற்கு, அசாம், காஷ்மீர், உ.பி., – ம.பி., – ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன. இந்நிலையில், பதஞ்சலி தன் தயாரிப்புகளை, வெளிநாடுகளில் விற்க திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, பாபா ராம்தேவ் கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஆலைகள் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில், சவுதி அரேபியாவில், பதஞ்சலி பொருட்கள் விற்கப்படுகின்றன. கனடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில், எங்கள் பொருட்களை விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக பாரம்பரிய உடைகளை மட்டுமின்றி ஜீன்ஸ் ஆடை தயாரிப்பிலும் இறங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|