பதிவு செய்த நாள்
13 செப்2016
07:40
புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், 570 பொருட்களுக்கு, குறிப்பிட்ட சதவீத அளவிற்கு வரிச் சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.டி.ஏ., எனப்படும் ஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம், முன், பாங்காக் ஒப்பந்தம் என, அழைக்கப்பட்டது. வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் மிகக் குறைவான வளர்ச்சி விகிதம் உள்ள நாடுகளுடனான பரஸ்பர வரிச் சலுகைகளுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இச்சலுகைகள் உள்ளிட்ட இதர வர்த்தக அம்சங்கள் குறித்து, ஏ.பி.டி.ஏ., உறுப்பு நாடுகள், மூன்று முறை கூடி விவாதித்துள்ளன. விரைவில் நான்காவது முறையாக, இக்குழு கூடி விவாதிக்க உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிலுவையில் உள்ள அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்படும் என, தெரிகிறது. ஏ.டி.பி.ஏ.,வில் இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட ஆறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|