பதிவு செய்த நாள்
13 செப்2016
07:42
புதுடில்லி : நவராத்திரியை முன்னிட்டு, டொமினோஸ் பீட்சா, ஒன்பது நாட்களுக்கும், சைவ உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது.
டோமினோஸ் பீட்சா, உடனடி உணவு வகைகள் தயாரிக்கும் உணவகங்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், நவராத்திரியை முன்னிட்டு, ஒன்பது நாட்களுக்கு, 500 உணவகங்களில், சைவ உணவு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஓர் உணவகம், இந்தியாவில், நவராத்திரி சமயத்தில், அசைவ உணவு வகை தயாரிப்பதை நிறுத்துவது, இதுவே முதன்முறையாகும்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவராத்திரி சீசனின் போது, அசைவ உணவு வகைகளுக்கான தேவை குறைவாக இருக்கும். எனவே, நவராத்திரி துவங்கும், அக்., 1ம் தேதி முதல், ஒன்பது நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள, 500 டோமினோஸ் உணவகங்களில், சைவ உணவு வகைகள் மட்டும் விற்கப்படும். அந்த நாட்களில், அசைவ உணவுகள் தயாரிப்பது நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|