பதிவு செய்த நாள்
13 செப்2016
07:44
புதுடில்லி : டி.எல்.எப்., நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் மென்பொருள் பூங்கா அமைக்க உள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்., சென்னையில், மென்பொருள் பூங்கா அமைக்க உள்ளது. இதற்காக, 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 3.20 கோடி சதுர அடியில் கட்டடங்களை குத்தகை விட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில், 2,700 கோடி ரூபாய் அளவுக்கு வாடகை வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில், 57 லட்சம் சதுர அடியில், மென்பொருள் பூங்கா அமைக்க உள்ளோம். மூன்று உயர் கோபுர கட்டடங்களில், முதல் இரண்டு கட்டடங்கள், அடுத்த ஆண்டு மத்தியில் செயல்பாட்டிற்கு வரும். குர்கானில், 20 லட்சம் சதுர அடியில், ஒரு அலுவலக கட்டடத்தையும் அமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|