பதிவு செய்த நாள்
16 செப்2016
07:22
மும்பை : டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரி கூறியதாவது: டாடா குழுமம், அதன் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், அதன் மூலம், அதிகளவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, தற்போது அனைத்து செயல்பாடுகளும், ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறி வருவதால், அத்தொழில்நுட்பத்தை, டாடா குழும நிறுவனங்களில் பரவலாக பயன்படுத்த உள்ளோம். இதன் மூலம், அடுத்த, 150 ஆண்டுகளுக்கு தேவையான, வலுவான டிஜிட்டல் தொழில்நுட்ப அடித்தளத்தை கொண்டதாக, டாடா குழுமம் உருவெடுக்கும்.தற்போது, டாடா குழுமத்தில், முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், டாடா கிளிக், டாடா ஐக்யூ மற்றும் டாடா டிஜிட்டல் ஹெல்த் என்ற மூன்று நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியால், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப சேவைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|