பதிவு செய்த நாள்
16 செப்2016
07:22
புதுடில்லி : ஹே குழுமம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த 2008ல், சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது முதல், இந்தியாவின் ஊதிய விகிதம், 0.2 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டு உள்ளது. இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், 63.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியாவில் தான், ஊதிய விகிதாச்சாரத்தில், மிக அதிகமாக சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது. மதிப்பீட்டு காலத்தில், சீனா, இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில், ஊதிய வளர்ச்சி, முறையே, 10.6, 9.3 மற்றும் 8.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. துருக்கியில், ஊதிய வளர்ச்சி, மைனஸ் 34.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைக் கண்டுள்ளது. அர்ஜென்டினா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளிலும், ஊதிய வளர்ச்சி, மைனஸ் 18.6 சதவீதம், 17.1 சதவீதம் மற்றும், 15.3 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|