பதிவு செய்த நாள்
16 செப்2016
07:23
மும்பை : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில், ‘ஏற்றுமதி உயர, ரூபாய் மதிப்பை குறைக்க வேண்டும்’ என, கூறியிருந்தார். உடனே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘அப்படிப்பட்ட திட்டம் அரசுக்கு கிடையாது’ என, மறுத்தார்.இந்நிலையில் நேற்று, ஒரு, ‘டிவி’ சேனல், ‘மத்திய அரசு, ரூபாய் மதிப்பை குறைக்க திட்டமிட்டு உள்ளது’ என, நிர்மலா சீதாராமன் கூறியதாக செய்தியை ஒளிபரப்பியது. இதையடுத்து, அன்னிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 0.28 சதவீதம் சரிந்து, 67.07 ரூபாயாக குறைந்தது. உடனே, மத்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்ததாஸ், ‘‘ரூபாய் மதிப்பு குறித்த செய்தி, உண்மை அல்ல,’’ என, கூறினார். நிர்மலா சீதாராமன், உடனடியாக, ‘டுவிட்டரில்’, ‘எந்த நிருபருக்கும் ரூபாய் மதிப்பு குறித்து பேட்டி அளிக்கவில்லை’ என மறுத்தார். இதையடுத்து, ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|