பதிவு செய்த நாள்
19 செப்2016
13:40
பெங்களூரு : ‛ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் கால வரம்பை உயர்த்த மத்திய நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடந்த கர்நாடக மாநில பா.ஜ., மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: மத்திய அரசின் ‛ஸ்டார்ட் அப்' திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, 3 ஆண்டுகள் வரி விலக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஆக்கப்பூர்வ வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இக்கால வரம்பை 7 ஆண்டுகளாக உயர்த்த மத்திய நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அனுப்பிய இப்பரிந்துரைகளை நிதியமைச்சகமும் பெற்றுக் கொண்டுவிட்டது. நிதியமைச்சகத்தின் பதிலுக்குப்பின் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|