பதிவு செய்த நாள்
19 செப்2016
14:56
ஊட்டி:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்க்கு, தமிழக கைத்தறி ஆடைகள் கேரளாவில் விற்பனையாகி உள்ளது.தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 'கோ- ஆப்டெக்ஸ்' கடைகள் மூலம், பல்வேறு கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள், விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில், சாலக்குடி, ஆலப்புழா, அங்கமாலி, திருச்சூர், கோழிக்கோடு உட்பட, ஏழு இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் கடைகள் செயல்படுகின்றன.
நடந்து முடிந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இக்கடைகளில், சேலத்தில் தயாரிக்கப்பட்ட கேரள பாரம்பரிய ஆடையான செட் முண்டு, நாகர்கோவில் சேலைகள், அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.கோ ஆப்டெக்ஸ் கோவை மண்டல மேலாளர் கூறுகையில், 'தமிழகத்தில் நெய்யப்படும் வேட்டி, சேலைகளை கேரள மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கேரளாவில் உள்ள கோ ஆப்டெக்ஸ் கடைகளில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய்அளவுக்கு விற்பனையாகி உள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|