பதிவு செய்த நாள்
20 செப்2016
05:00
புதுடில்லி : ஆஸ்திரேலியாவிற்கு, அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்ய, இந்திய தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது.
கடந்த, 2015 – 16ல், இந்திய தேயிலை ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரித்து, 22.10 கோடி கிலோவாக உள்ளது. தற்போது, ஆஸ்திரேலியாவில் பலர், இந்திய தேயிலையை விரும்புகின்றனர். இதனால், அந்த நாட்டிற்கு, அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்ய, இந்திய தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு கூறியதாவது: ஆஸ்திரேலியாவில், தேயிலை சந்தை, 1.50 கோடி கிலோவாக உள்ளது. அந்நாட்டினர், ‘கிரீன் டீ, ஆர்கானிக் டீ, பிரீமியம் டீ’ வகைகளை, அதிகம் விரும்புகின்றனர். தற்போது, இந்தியாவில் இருந்து, 30 லட்சம் கிலோ தேயிலை, அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரு மடங்காக அதிகரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|