பதிவு செய்த நாள்
20 செப்2016
05:01
மும்பை : பிரபாத் டெய்ரி நிறுவனம், ஈராக் நாட்டிற்கு, ‘சீஸ்’ எனும், பாலடைக்கட்டிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.
பிரபாத் டெய்ரி நிறுவனத்திற்கு, மஹாராஷ்டிர மாநிலம், ஸ்ரீராம்பூர் என்ற இடத்தில், பால் பதப்படுத்தும் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு, ‘சீஸ்’ ஏற்றுமதி செய்வதில், மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. பிரபாத் டெய்ரி, மொரீஷியஸ், நைஜீரியா, மலேஷியா, அல்கேரியா உள்ளிட்ட நாடுகளுக்கு, நெய் மற்றும் கொழுப்பு நீக்கிய பால் பவுடர்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம், சில மாதங்களுக்கு முன், துபாய் நாட்டிற்கு, ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும், இனிப்பு சுவை உடைய சுண்டவைக்கப்பட்ட பாலை, ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றது. இந்நிலையில் அந்நிறுவனம், ஈராக் நாட்டிற்கு முதன்முறையாக, சீஸ் ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|