வாகன உதி­ரி­பாக வணிகம் ரூ.2 லட்சம் கோடியை எட்டும்வாகன உதி­ரி­பாக வணிகம் ரூ.2 லட்சம் கோடியை எட்டும் ... ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.67 ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.67 ...
‘மார்பிள்’ இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள் நீக்கம்; சுங்க வரி 3 மடங்கு அதி­க­ரிப்பு; மத்­திய அரசு நட­வ­டிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2016
05:06

புது­டில்லி : மத்­திய அரசு, ‘மார்பிள்’ எனப்­படும், பளிங்கு கற்கள் இறக்­கு­ம­திக்­கான கட்­டுப்­பா­டு­களை நீக்­கி­யுள்­ளது; அதே­ச­மயம், அவற்­றுக்­கான சுங்க வரி, மூன்று மடங்கு உயர்த்­தப்­பட்டு உள்­ளது.இதனால், கச்சா பளிங்கு கற்­களை இறக்­கு­மதி செய்து, சீர­மைத்து தரும் தொழில், வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மத்­திய அரசு, 2014 – 15ம் நிதி­யாண்டில், கச்சா மார்பிள் மற்றும் ‘டிரா­வெர்டைன்’ எனப்­படும், சுண்­ணாம்பு சலவைக் கற்கள் இறக்­கு­ம­திக்கு, புதிய கட்­டுப் ­பா­டு­களை விதித்­தது.
கூட்டமைப்பு புகார்அதன்­படி, ஓராண்­டிற்­கான, கச்சா மார்பிள், டிரா­வெர்டைன் கற்கள் இறக்­கு­மதி வரம்பு, 8 லட்சம் டன் ஆகவும், குறைந்­த­பட்ச இறக்­கு­மதி கட்­டணம், டன்­னுக்கு, 325 டாலர் ஆகவும் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அந்த நிதி­யாண்டில், 24 கோடி டாலர் மதிப்­புள்ள, கச்சா மார்பிள், டிரா­வெர்டைன் கற்கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டன. இது, 2015 – 16ம் நிதி­யாண்டில், 26 கோடி டால­ராக அதி­க­ரித்­தது. இருந்­த­போ­திலும், மார்பிள் இறக்­கு­மதி வரம்பால், இத்­து­றையில் உள்ள, 5,000 நிறு­வ­னங்­களில், 472 பெரிய நிறு­வ­னங்கள் மட்­டுமே பய­ன­டை­வ­தாக, டில்லி மார்பிள் முக­வர்கள் கூட்­ட­மைப்பு, புகார் தெரி­வித்­தது.
இது தொடர்­பாக, இக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள், மத்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ரா­மனை சந்­தித்து, இறக்­கு­மதி கட்­டுப்­பா­டு­களை நீக்க வேண்டும் என, வலி­யு­றுத்­தினர். மேலும், கச்சா மார்பிள் கற்­க­ளுக்­கான, குறைந்­த­பட்ச இறக்­கு­மதி வரியை நீக்­கினால், செயற்­கை­யாக விலையை உயர்த்தி, இறக்­கு­மதி செய்­வது கட்­டுக்குள் வரும் என்­ப­துடன், அதன் வாயி­லாக நடை­பெறும் சட்ட விரோத பணப் பரி­மாற்­றத்­தையும் கட்­டுப்­ப­டுத்த முடியும் எனவும், தெரி­விக்­கப்­பட்­டது.
இதை பரி­சீ­லித்த மத்­திய அரசு, தற்­போது, கச்சா மார்பிள், டிரா­வெர்டைன் கற்கள் இறக்­கு­ம­திக்­கான கட்­டுப்­பா­டு­களை தளர்த்தி உள்­ளது. அதே­ச­மயம், அவற்­றுக்­கான இறக்­கு­மதி வரியை, தற்­போ­தைய, 10 சத­வீ­தத்தில் இருந்து, 40 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.
குறைந்­த­பட்ச இறக்­கு­மதி கட்­டணம், டன்­னுக்கு, 200 டால­ராக குறைக்­கப்­பட்டு உள்­ளது; ஒரு சதுர மீட்டர் மார்பிள் கற் பலகை இறக்­கு­ம­திக்கு, குறைந்­த­பட்ச கட்­டணம், 40 டாலர்; கிரானைட் கற்­ப­ல­கைக்கு, 50 டாலர் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.
மீண்டும் திறக்கப்படும்மார்பிள் கற்­ப­லகை மற்றும் கிரானைட் கற்­ப­ல­கை­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி, 10 சத­வீ­தத்தில் இருந்து, 20 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. மத்­திய அரசின் இந்த நட­வ­டிக்கை மூலம், கச்சா மார்பிள் கற்கள் இறக்­கு­மதி அதி­க­ரிக்கும்; மூலப்­பொருள் பற்­றாக்­கு­றையால் மூடப்­பட்ட, மார்பிள் கல் சீர­மைப்பு தொழிற்­சா­லைகள் மீண்டும் திறக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)