பதிவு செய்த நாள்
26 செப்2016
23:31
புதுடில்லி : ஓலா நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பிரிவு தலைவர், ரகுவேஷ் சரப் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓலா வாடகை கார் சேவையில், பயணக் கட்டணத்தை, சக பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும், ‘ஷேர்’ திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்த சேவை, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஏழு நகரங்களுடன், சண்டிகர், ஆமதாபாத், ஜெய்ப்பூர் நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இச்சேவைக்கான பயணக் கட்டணம், 45 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஒரு கி.மீ., பயணத்திற்கு, மூன்று ரூபாய் என்ற அளவிற்கு கட்டணக் குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. இது, பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்கும். அதேசமயம், சுற்றுச்சூழல் மாசுபாடு, சாலையில் வாகன நெருக்கடி ஆகிய பிரச்னைகளுக்கு, இந்த பயண நடைமுறை தீர்வளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. பயணக் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் சேவையில், ஊபர் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, ஓலா கட்டணத்தை குறைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|