பதிவு செய்த நாள்
26 செப்2016
23:32
புதுடில்லி : ‘இந்தியாவில், கடந்த, ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், பிரின்டர் விற்பனை, 7.58 லட்சமாக குறைந்துள்ளது’ என, ஐ.டி.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வீடு, அலுவலகங்களில், பிரின்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதிப்பீட்டு காலாண்டில், பிரின்டர் விற்பனை, 4.7 சதவீதம் குறைந்து, 7.58 லட்சமாக சரிவடைந்து உள்ளது. இதற்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், பிரின்டர் தேவை குறைந்ததே காரணம். தற்போது, பண்டிகை காலம் துவங்குவதால், பிரின்டர் விற்பனை அதிகரிக்கும் என, தெரிகிறது. பிரின்டர் சந்தையில், எச்.பி.,நிறுவனம், 43.1 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, கேனான், 21.2 சதவீதம்; எப்சன், 20.9 சதவீதம் என்றளவில் உள்ளன. சாம்சங், நான்காவது இடத்திலும், அடுத்து பிரதர் நிறுவனமும் உள்ளன. இவ்வாறு ஐ.டி.சி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|