பதிவு செய்த நாள்
26 செப்2016
23:33
புதுடில்லி : ‘இந்தியாவில், பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு, 2017 – 18ம் நிதியாண்டில், ஆறு சதவீதம் அதிகரிக்கும்’ என, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ இன்வெஸ்டர்ஸ் மதிப்பிட்டு உள்ளது.
இதே காலத்தில், சீனாவின் பெட்ரோலிய பொருட்களின் தேவை, இந்தியாவை விட, ஒரு மடங்கு குறைவாக, மூன்று சதவீதம் என்றளவிற்கே அதிகரிக்கும். இப்பிரிவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, சீனா, ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டு வந்தது.சீனாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால், அடுத்த, 18 மாதங்களுக்கு, அந்நாட்டின் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைவாகவே இருக்கும்.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், அடுத்த ஆண்டிற்கான, திரவ எரிபொருள் தேவை, நாள் ஒன்றுக்கு, 90 லட்சம் பீப்பாய் என்றளவில் உயர்ந்து, 3.30 கோடி பீப்பாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|