‘டிஜிட்டல்’ பண பரி­வர்த்­தனை அதி­க­ரிக்­கணும்‘டிஜிட்டல்’ பண பரி­வர்த்­தனை அதி­க­ரிக்­கணும் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.50 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.50 ...
சரக்கு பெட்­டக போக்­கு­வ­ரத்து துறையில் இந்­தியா சர்­வ­தேச வளர்ச்­சியை விஞ்­சி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
23:35

புது­டில்லி : ‘இந்­தாண்டு, ஜன., – ஜூன் வரை­யி­லான ஆறு மாதங்­களில், வெளி­நா­டு­க­ளுக்­கான சரக்கு பெட்­ட­கங்­களை கையாண்­டதில், இந்­தியா, 11 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது; இதே காலத்தில், சர்­வ­தேச சரக்கு பெட்­டக போக்­கு­வ­ரத்து வளர்ச்சி, கடந்த ஆண்டைப் போன்றே, 2.8 சத­வீ­த­மாக, மாறு­த­லின்றி உள்­ளது’ என, மார்ஸ்க் லைன் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
அதன் விபரம்: அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடுகள், பொரு­ளா­தார மந்­த­நி­லையில் இருந்து மெல்ல மீளத் துவங்­கி­யுள்­ளன. இதனால், அந்­நா­டு­க­ளுக்கு, இந்­தியா கையாளும் சரக்கு பெட்­ட­கங்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது. உள்­நாட்டு துறை­மு­கங்­களில் சரக்கு பெட்­ட­கங்­களை கையாள்­வதில், மும்­பையில் உள்ள, ஜவ­ஹர்லால் நேரு துறை­முகம், 55 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது.
கடந்த, 1989 மே முதல் செயல்­பட்டு வரும் இத்­து­றை­முகம், முதன்முறை­யாக, 2015 – 16ம் நிதி­யாண்டில், தலா, 20 அடி நீளம், 8 அடி உயரம், 8.6 அடி அகலம் உள்ள, 44.90 லட்சம் சரக்கு பெட்­ட­கங்­களை கையாண்டு, சாதனை படைத்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்டில், 44.70 லட்­ச­மாக இருந்­தது. இத்­து­றை­முகம், வரும், 2022 – 23ம் நிதி­யாண்டில், 1 கோடி சரக்கு பெட்­ட­கங்­களை கையாள இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.சரக்­கு­களை பெட்­ட­கத்தில் அடைத்து ஏற்­று­மதி செய்­வ­திலும், இறக்­கு­மதி செய்­வ­திலும், இந்­தி­யாவின் வளர்ச்சி வாய்ப்பு பிர­கா­ச­மாக உள்­ளது.
‘உல­க­ளவில் இந்­தியா, தொடர்ந்து வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது’ என, பன்­னாட்டு நிதியம் பாராட்டி உள்­ளது. இந்­தி­யாவின் சரக்கு பெட்­டக போக்­கு­வ­ரத்தில், வட அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள், 33 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன. அதனால், அந்­நா­டு­களின் எழுச்சி, இந்­தி­யாவின் வளர்ச்­சிக்கு உதவும்.இந்­தாண்டு, இந்­தி­யாவின் ஏற்­று­ம­தியில் அமெ­ரிக்கா, பிரிட்டன், ஜெர்­மனி, சவூதி அரே­பியா, துருக்கி, கென்யா ஆகிய நாடுகள் முன்­னிலை வகிக்­கின்­றன.
ஏற்­று­ம­தியில், அளவின் அடிப்­ப­டையில் காய்­க­றிகள், 56 சத­வீதம்; பழங்கள் மற்றும் கொட்டை வகைகள், 42 சத­வீதம்; திராட்சை, 180 சத­வீதம் மற்றும் ஆடைகள் பிரிவு, 13 சத­வீத வளர்ச்சி கண்­டுள்­ளன. வாகனத் துறை ஏற்­று­மதி, 9 சத­வீதம் அதி­க­ரித்துள்­ளது. புதிய சந்­தை­களும், நாட்டின் ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு துணை புரிந்து வரு­கின்­றன. நடப்­பாண்டு, இந்­தி­யாவின் வர்த்­தகம், சர்­வ­தேச வர்த்­த­கத்தை விட, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 8 – 9 சத­வீ­த­மாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
இந்­தி­யாவின் இறக்­கு­ம­தியில் சீனா, அமெ­ரிக்கா, ஜெர்­மனி, தென்­கொ­ரியா, சவுதி அரே­பியா ஆகி­யவை முன்­ன­ணியில் உள்­ளன. மொத்த இறக்­கு­ம­தியில், சீனாவின் பங்­க­ளிப்பு, 30 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது. அதில், மின்­னணு பொருட்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)