பதிவு செய்த நாள்
28 செப்2016
04:10
புதுடில்லி : மீன் வளர்ப்பை ஊக்குவிக்க, கடலோர மாவட்டங்களில், முகமை அமைப்பை நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து கடலோர மாவட்டங்களிலும், மீன் வளர்ப்பை ஊக்குவிக்க, முகமை அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏற்றுமதியை ஊக்குவிக்க, மத்திய அரசு, ஆண்டுதோறும், எம்.இ.ஐ.எஸ்., என்ற திட்டத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. நடப்பு நிதியாண்டில், அந்த திட்டத்தில், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க, கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மீன் வளர்ப்பை ஊக்குவிக்க, கடலோர மாநிலங்களில், மாநில முதல்வர், தலைமை செயலர் ஆலோசனையின் பேரில், முகமை அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|