பதிவு செய்த நாள்
28 செப்2016
04:12
மும்பை : இந்தியாவில், முதன்முறையாக, உலக அளவிலான வர்த்தக வழக்குகளை விசாரிக்க, மும்பையில், சர்வதேச மத்தியஸ்த மையம் அமைய உள்ளது.
தற்போது, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் லண்டன் நகரங்களில், இது போன்ற சர்வதேச மத்தியஸ்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு மையம் மூலம், இந்திய நிறுவனங்கள், அவற்றின் அயல்நாட்டு வர்த்தகப் பிரச்னைகளை முறையிட்டு, தீர்வு கண்டு வருகின்றன. இனி, இந்த மையங்களுக்கு மாற்றாக, ‘எம்.சி.ஐ.ஏ.,’ என, சுருக்கமாக அழைக்கப்படும், மும்பை சர்வதேச மத்தியஸ்த மையம் செயல்படும்.
விரைவில் தீர்வுமும்பையில், இம்மையம், அக்., 8ல் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள், உள்நாட்டிலேயே, அவற்றின் பலதரப்பட்ட வர்த்தக பிரச்னைகளுக்கு சுலபமாகவும், விரைவாகவும் தீர்வு காணலாம். மஹாராஷ்டிர அரசு, சர்வதேச வணிக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மத்தியஸ்த மையமாக, இந்தியாவை உருவாக்கும் நோக்கில், எம்.சி.ஐ.ஏ.,வை உருவாக்கி உள்ளது. இங்கு, வழக்கு விசாரணையில், சர்வதேச நடைமுறை கடைபிடிக்கப்படும் என்பதால், பன்னாட்டு நிறுவனங்களும், பிரச்னைகளுக்கு தீர்வு காண, இம்மையத்தை அணுகும்.
டில்லியில் உள்ள, இந்திய மத்தியஸ்த கவுன்சில், மும்பையின் இந்திய வர்த்தக கூட்டமைப்பு மற்றும் சென்னை வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றிலும், தொழில் தகராறுகளை தீர்த்து வைக்கும் மையங்கள் உள்ளன; இவை, சர்வதேச வணிகப் பிரச்னைகள் எதையும், இதுவரை கையாளவில்லை.
ஓராண்டுஇந்திய நிறுவனங்களின் பிரதான தேர்வாக, சிங்கப்பூர், லண்டன் மற்றும் ஹாங்காங் மத்தியஸ்த மையங்கள் உள்ளன. இனி, இந்த நிலை மாறும். எம்.சி.ஐ.ஏ., ‘வீடியோ கான்பரன்ஸிங்’ உட்பட, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், விசாரணையை மேற்கொள்ளும். அத்துடன், ஒரு வழக்கின் விசாரணையை, ஓராண்டிற்குள் முடித்து தீர்ப்பு வழங்கும். இதற்காக மத்திய அரசு, கடந்த ஆண்டு, 1996ம் ஆண்டின், மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
‛இந்தியாவில், மத்தியஸ்த விசாரணைகள் நியாயமாக நடைபெறுவதில்லை என்ற கண்ணோட்டம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு உள்ளது. இதை மாற்ற, மும்பையில், சர்வதேச தரத்தில் அமையும், மத்தியஸ்த மையம் உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|