பதிவு செய்த நாள்
29 செப்2016
01:44
புதுடில்லி : பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் அது சார்ந்த வர்த்தக சேவையில், செக்யூரிட்டி அண்ட் இன்டெலிஜன்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும், வர்த்தகம் மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, அது தொடர்பான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் இந்நிறுவனம் அளித்துள்ளது. ‘செபி’ அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்நிறுவனம், பங்கு வெளியீடு மேற்கொள்ளும். பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இத்தொகையை, பழைய கடன்களை திரும்பத் தரவும், நடைமுறை மூலதனத் தேவைகளை சமாளிக்கவும், இதர நிர்வாக செயல்பாடுகளுக்கும், இந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். இந்தாண்டு, 21 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு குறிப்பிடத்தக்க அளவிற்கு நிதி திரட்டிக் கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|