தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... ஒரே நாளில் 45 ஆயிரம் 'சிம் கார்டு' : பி.எஸ்.என்.எல்., விற்பனை ஒரே நாளில் 45 ஆயிரம் 'சிம் கார்டு' : பி.எஸ்.என்.எல்., விற்பனை ...
ரூ.30 ஆயிரம் கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2016
13:35

ராமநாதபுரம்: இறால் மீன் வளர்ப்பில் இந்தியாவுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைப்பதாக கருத்தரங்கில் விஞ்ஞானி தெரிவித்தார். மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தட்பவெப்ப நிலை மாறுதல்களும், இறால் வளர்ப்பு மேலாண்மையும் குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடந்தது.
ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர் குமரன் பேசியதாவது: உலக அளவில் இறால் மீன் உற்பத்தி யில் இந்தியா இரண்டாம் இடம் பெற்று உள்ளது. சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் கடந்த 2010ம் ஆண்டில் ஒரு லட்சம் எக்டேரில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் டன் டைகர் இறால் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பிறகு அதிக உற்பத்தி திறன் கொண்ட 'வெண்மை' இறால் மீன் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டுகளில் இறால் மீன் உற்பத்தி நான்கு மடங்காக அதிகரித்தது.
இந்தியாவில் ஒரு லட்சம் எக்டேராக இருந்த இறால் வளர்ப்பு பரப்பளவு தற்போது 2 லட்சம் எக்டேராக அதிகரித்துள்ளதால் இறால் மீன் உற்பத்தியும் 4.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இவற்றில் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு கடந்த ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகளவு இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 7,000 எக்டேரில் 22 ஆயிரம் டன் இறால் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)