வலை­தள விற்­ப­னையில் வெற்றி நிச்­சயம்: நிலே­கனி வலை­தள விற்­ப­னையில் வெற்றி நிச்­சயம்: நிலே­கனி ... விளை­பொருள் முன்­பேர வணிகம்:ஐ.சி.இ.எக்ஸ்., மீண்டும் துவங்­கு­கி­றது விளை­பொருள் முன்­பேர வணிகம்:ஐ.சி.இ.எக்ஸ்., மீண்டும் துவங்­கு­கி­றது ...
அடுத்த 4 ஆண்­டு­களில்...மின்­னணு வடி­வ­மைப்பு, தயா­ரிப்பு துறைரூ.2 லட்சம் கோடி முத­லீ­டு­களை ஈர்க்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2016
04:47

ஐத­ராபாத்:‘‘அடுத்த நான்கு ஆண்­டு­களில், மின்­னணு பொருட்­க­ளுக்­கான, ‘சாப்ட்வேர் – ஹார்­டுவேர்’ வடி­வ­மைப்பு மற்றும் தயா­ரிப்பு துறையில், 2 லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு முத­லீடு குவியும்,’’ என, இந்­திய மின்­னணு மற்றும் செமி­கண்­டக்டர் கூட்­ட­மைப்­பான, ஐ.இ.எஸ்.ஏ., தலைவர், எம்.என்.வித்­யா­சாகர் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில், மின்­னணு சாத­னங்­களை வடி­வ­மைக்­கவும், தயா­ரிக்­கவும், பல்­வேறு நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக கள­மி­றங்கி உள்­ளன.இத்­து­றையில், கடந்த இரண்­டரைஆண்­டு­களில், 1.50 லட்சம் கோடிரூபாய் மதிப்­பி­லான திட்­டங்­க­ளுக்கு,மத்­திய, மாநில அர­சுகள் அனு­மதிஅளித்­துள்­ளன. அடுத்த, 3 – 4 ஆண்­டு­களில், இத்­துறை, 2 லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு, முத­லீ­டு­களை ஈர்க்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. கிளைகள்அன்­னிய முத­லீ­டு­களை திரட்டும் நோக்கில், தைவானில், தைபே மற்றும் ஜப்­பானில், புகோகா நக­ரங்­களில், ஐ.இ.எஸ்.ஏ., கிளைஅலு­வ­ல­கங்கள் திறக்­கப்­பட உள்­ளன. அமெ­ரிக்கா மற்றும் தென்­கொ­ரி­யா­விலும், கிளைகள் திறக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதனால், இந்­தி­யாவில் மின்­னணு வடி­வ­மைப்பு மற்றும் தயா­ரிப்பு துறையில், கால்­ப­திக்க நினைக்கும் வெளி­நாட்டு நிறு­வ­னங்கள், அது தொடர்­பான அனைத்து விப­ரங்­க­ளையும், உத­வி­க­ளையும், ஐ.இ.எஸ்.ஏ., கிளை அலு­வ­ல­கங்­களில் பெறலாம்.
உள்­நாட்டில் அம­லாக உள்ள, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி, மின்­னணு வடி­வ­மைப்பு மற்றும் தயா­ரிப்பு துறையை, மேலும் ஊக்­கு­விக்கும். முத­லீ­டு­களை திரட்­டு­வ­தற்கு சலு­கைகள் வழங்­கு­வதில், மாநி­லங்கள் இடை­யி­லான பார­பட்­ச­மான அணு­கு­முறை முடி­வுக்கு வரும். நாடு முழு­வதும், ஒரே வரி விகிதம் நடை­மு­றைக்கு வரும் என்­பதால், தொழில் செய்ய சாத­க­மான மாநி­லங்­களில், நிறு­வ­னங்­களின் முத­லீடு அதி­க­ரிக்கும். இந்­திய வாகனத் துறை, 20 ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்த நிலையில், தற்­போது, மின்­னணு வடி­வ­மைப்பு மற்றும் தயா­ரிப்பு துறை உள்­ளது.
வளர்ச்சி:கடந்த, 1990களின் மத்­தியில், ஜப்­பானின் டொயோட்டா நிறு­வனம், இந்­தி­யாவில் வாகன தயா­ரிப்பில் இறங்­கி­யது. அதை தொடர்ந்து, ஹோண்டா, வால்வோ என, ஏரா­ள­மான நிறு­வ­னங்கள் வந்­தன. இதன் மூலம், இந்­தியா, சர்­வ­தேச வாகன துறையில், முக்­கிய மைய­மாக உரு­வெ­டுத்து உள்­ளது. இதே வளர்ச்­சியை, மின்­னணு வடி­வ­மைப்பு மற்றும் தயா­ரிப்பு துறையும் காணும். அதற்கு, வாகனத் துறை போல, 20 ஆண்­டுகள் தேவைப்­ப­டாது; 10 ஆண்­டு­களே போதும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)