பதிவு செய்த நாள்
02 அக்2016
00:12
புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தாலும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு, மத்திய அரசின், வரிச்சலுகை தொடர வேண்டும் என, அந்த வாகனங்களின் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, அந்த கூட்டமைப்பினர் கூறியதாவது:மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்கும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக, பேட்டரி வாகன பயன்பாட்டை ஊக்குவித்து, வரிச்சலுகை வழங்கி வருகிறது. தற்போது, பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனம், சிறிய வகை கார்களுக்கு, ஆறு சதவீதம் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. அது, அமலுக்கு வந்தாலும், பேட்டரி வாகனங்களுக்கு தரப்படும் வரிச்சலுகையை தொடரக் கோரி, மத்திய வருவாய் துறை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|