பதிவு செய்த நாள்
05 அக்2016
02:59
சென்னை : மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, நோட்டோம் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், ரசாயன பொருட்கள் துறையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், இங்கிலாந்தில் ரசாயன பொருட்கள் தயாரிப்பில் உள்ளது, நோட்டோம் எனும் நிறுவனம்.1979ல் துவங்கப்பட்ட நோட்டோம் நிறுவனத்திற்கு, 45 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், நோட்டோம் என்ற நிறுவனத்தை, 120 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர், அஷ்வின் சி முத்தையா கூறியதாவது: எங்கள் நிறுவனம், புதிய தொழில்நுட்ப அவசியத்தை உணர்ந்து, இங்கிலாந்து நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. இதனோடு, எங்கள் நிர்வாகம் மற்றும் தலைமை பண்பு சேரும் போது, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|