பதிவு செய்த நாள்
05 அக்2016
03:00
புதுடில்லி : ஓரிபிளேம் நிறுவனம், இணையதளங்கள் மூலமாக நடக்கும், தன் தயாரிப்புகளின் விற்பனையை, கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
ஓரிபிளேம் நிறுவனம், தோல் பராமரிப்பு, அழகு சாதனம் மற்றும் சத்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஓரிபிளேம் தயாரிப்புகள், கடைகள் தவிர்த்து, இணையதள வணிகம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. அவை, முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஓரிபிளேம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 60 சதவீத ஆர்டர்கள், இணையதள வணிகம் மூலம் கிடைக்கிறது. இணையதள வணிகத்தில், எங்கள் தயாரிப்புகளை விற்கும் போது, தனி குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. அதன் மூலம், பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்குள், முறையாக டெலிவரி செய்யப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|